புற்றுநோயாளிகளை ஏமாற்றி 3 இலட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்



மரணத்துடன் போராடும் அப்பாவி புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கான பணத்தை ஏமாற்றி சுமார் மூன்று இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபருக்கு நேற்று (01) ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய தண்டனை வழங்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு புற்று நோயாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் பிரதிவாதிக்கு மேலதிக 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.



No comments: