14 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பலி

எம்பிலிபிட்டிய - செவனகல, கட்டுபில பிரதேசத்தில் நேற்றைய தினம் (09) குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கிப் உயிரிழந்துள்ளார்.

14 வயதுடைய பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பச் சுற்றுலாவாக அப்பகுதிக்குச் சென்றிருந்த குடும்ப உறுப்பினர்கள் பலர், குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, குறித்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

குறித்த சிறுவனை குளத்தில் இருந்து மீட்டு தண்டும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments: