வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பிரதேசத்தில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 30 வயதுடைய நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மணியர்குளத்தின் அணைக்கட்டினை பகுதியில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் தற்போதும் அதே இடத்தில் காணப்படுகின்றது.








No comments: