மீன் சந்தையில் 11 வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை



நேற்றைய தினம் (01) யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணை , நாவாந்துறை, காக்கைதீவு, சின்னக்கடைஆகிய மீன் சந்தைகளில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகஸ்தர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகள் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளைப் பயன்படுத்திய 11 வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

No comments: