முட்டைகளை விற்பனை செய்யாமல் இருக்க தீர்மானம்
நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார துறை முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலுக்கு மாத்திரம் பயன்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
முட்டை இறக்குமதி மற்றும் கால்நடை அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பொது உபயோகத்திற்காக கடைகளில் விற்பதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
No comments: