அம்பாறை திருக்கோவில் பகுதியில் கர்ட், பீட்ருட் செய்கை பலனளித்தது
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் விவசாய உற்பத்திக் கிராமங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட குழுவினர் நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தனர்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் உணவு உற்பத்தி மாதிரி கிராமங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடியாறு மீள்குடியயேற்ற விவசாய உணவு உற்பத்தி மாதிரி கிராமங்களை குறித்த குழுவினர் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்தும் உணவுப் பஞ்சத்தில் இருந்தும் நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் தற்போது தேசிய வேலைத்திட்டமாக உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இந்நிலையில் தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு கிராம விவசாயிகளினால் பரிச்சார்தமாக பயிரிடப்பட்டுள்ள கரட் பீட்றூட் சிவப்பு கோ மற்றும் வெள்ளை கோவா உருளைக்கிழங்கு போன்ற மலைநாட்டு மரக்கறிப் பயிர்களின் அறுவடையும் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்தினன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே.எம்.ஏ.டக்ளஸ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். எச்.பி.அனீஸ் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: