திருக்கோவிலில் சிங்கள மொழிப் பயிற்சிநெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

 திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள மொழிப் பாட நெறி பூர்த்தியடைந்துள்ளது.


 பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு காஞ்சிரங்குடா- கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் பயிற்சி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.


 திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.T.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் அ.ஆன்ஸி யுரேமினியின் ஒருங்கிணைப்பின் கீழ் குறித்த நிகழ்வானது  இடம் பெற்றது.


  நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.K. சதிசேகரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு.T. மோகன ராஜா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.K. விநாயகமூர்த்தி மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளரான A. M.M. முஜீப்  அவர்கள்  விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments: