இன்னும் அச்சுக்குப் போகாத நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வர்த்தமானி.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் அச்சிடலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானியை அச்சிடுமாறு அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை பணிப்புரை விடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
No comments: