தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள் இன்று.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதடன் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைந்திருந்தன.

கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கெடுக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று நண்பகல் 12 மணி முதல் 1.30 வரையிலான காலப்பகுதி ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலமாகும் என தெரிவித்தார். 

ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலம் நிறைவடைந்ததன் பின்னரே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் , இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



No comments: