மாகாண அதிகாரங்கள் தொடர்பில் சாதகமான பதில் வழங்கிய ஜனாதிபதி.

 நேற்று மாலை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை திடீரென அழைத்து சத்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதன் முதல்கட்டமாக மாகாண DIGகளின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட்டு, அவர்கள் மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர். 

வடக்கில் தொல்லியல், வனவளத்துறை, பாதுகாப்பு துறை என்பன கையகப்படுத்தியுள்ள காணிகள் விரைவாக விடுவிக்கப்படும் வகையில் திங்கட்கிழமை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும். 

குருந்தூர்மலை, தென்னமரவாடி, திரியார் போன்ற தமிழர்களின் பாரம்பரிய காணிகளில் அத்துமீறி போடப்பட்ட எல்லைக் கற்கள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments: