சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 72 வயது நபருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

13 வருடங்களுக்கு முன்னர் லுணுகம்வெஹர, பதவிகம பகுதியில் பத்து வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 72 வயதுடைய திருமணமாகாத ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே உத்தரவிட்டார். 

மேலும்10,000 ரூபா அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100,000 ரூபா இழப்பீடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

லுணுகம்வேரே, பதவிகமவில் வசித்துவரும் 72 வயதான திருமணமாகாத நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.




No comments: