பாலமுனையில் துப்பாக்கி சூடு - 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நேற்றிரவு அம்பாறை அக்கரைப்பற்று பாலமுனை வீதித் தடுப்பில் மக்கள் குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 12 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் வாய்த்தர்க்கம் மோதலாக உருவாகி சம்பவம் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் போது சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் துப்பாக்கிச்சூடும் அப்பகுதியில் நடத்தியுள்ளனர். 

இதையடுத்தே இரு தரப்புக்குமிடையே மோதல் நிலை உருவாகிய போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து இந் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: