றம்புக்கணயில் பாதுகாப்பிகற்காக இராணுவத்தினர் குவிப்பு.
றம்புக்கணயில் ஆர்ப்ட்டத்தின்போது இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளன.
இதனையடுத்து றம்புக்கண, கேகாலை மற்றும் தெவலேகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .
பிரதேசத்தில் பொது பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு இராணுவத்திற்கு உதவுமாறு காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன பாதுகாப்பு செயலாளரிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து அப்பகுதிகளில் இராணுவத்தை களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
No comments: