பொலிசாரின் மோட்டர்சைக்கிளை மோதிவிட்டு தப்பி ஓடிய சொகுசு வாகனம் -பொலிசாரால் மீட்பு

(கனகராசா சரவணன்)


கல்முனை தரவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிசார் சொகுசு வாகனம் ஒன்றை நிறுத்தமுற்பட்டபோது போக்குவரத்து பொலிசாரின் மோட்டர்சைக்கிளில் மோதிவிட்டு தப்பிச் சென்று கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அருகாமையில் வாகனத்தை விட்டுவிட்டு அதன் சாரதி தப்பி ஓடிய நிலையில் குறித்த வாகனத்தை மீட்டுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள தரவை பிள்ளையார் அலையத்துக்கு அருகாமையில் சம்பவதினமான நேற்று இரவு மாவட்ட போக்குவரத்து பொலிசார் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது கல்முனை நோக்கி பிரயாணித்த சொகுசு வாகனம் ஒன்றை போக்குவரத்து பொலிசார் நிறுத்த முற்பட்டபோது குறித்த வாகனம் பொலிசாருக்கு வெட்டிவிட்டு அங்கிருந்த போக்குவரத்து பொலிசாரின் மோட்டர்சைக்கிளுடன் மோதிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய போது அந்த வாகனத்தை பொலிசார் பின் தொடர்ந்த நிலையில் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தை செலுத்தியவாக்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த வாகனத்தை பொலிசார் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் வாகனத்தை செலுத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: