திருக்கோவில் பிரதேசத்தில் இரண்டு பொலிஸார் தொற்றாளர்களாக அடையாளம்



திருக்கோவில் பிரதேசத்தில் இன்று 03 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.மோனகாந்தன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

மேலும் திருக்கோவில் பிரசேத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட்19 பரிசோதனைகளின் போது இரண்டு பொலிஸாருக்கும் பாடசாலை மாணவர் ஒருவருக்கும் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மக்கள் மிகவும அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

No comments: