PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்
கொவிட் புதிய திரிபு கண்டறிப்பட்டதை அடுத்து அரச ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்படுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு கேள்வி 20,000 ஆக அதிகரித்துள்ளதுடன், அது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சரவை கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments: