கொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ உதவிக்கு நிதி திரட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இதற்காக வரும் ஆட்டங்களில் ஒன்றில் பெங்களூரு அணி பிரத்யேகமாக நீலநிற உடை அணிந்து விளையாட உள்ளது. 

பின்னர் அந்த சீருடையில் வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஏலம் விட்டு பணம் திரட்டப்பட உள்ளதாக பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


No comments: