நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட 48 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,891 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 111,753பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments: