மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாராஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களின் ஊடாக வழங்கப்படும் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பிரிவு வழங்கியுள்ள வழிமுறைகளுக்கு அமைவாக குறித்த அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முற்பதிவு செய்து கொண்ட சகல பதிவுகளும் இதன் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

No comments: