தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 264 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 264 பேர் நேற்றைய தினத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,455 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: