நாடு திரும்பிய இலங்கையர்கள்
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 24 விமான சேவைகள் ஊடாக 1363 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் கட்டாரிலிருந்து 173 பேரும்,ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 232 பேரும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு மேலும் 1345 பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: