ஆம் என்ற ஒருவார்த்தை உலக நாடுகளை அதிர வைத்த ஜோ பைடன்
அமெரிக்கா மீது நடத்தபட்ட சைபர் தாக்குதல் மற்றும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை இந்த நடவடிக்கை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை 30 ரஷ்ய நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு 10 தனி நபர்கள், அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ராஜரீக ரீதியிலான அதிகாரிகள் இந்த பட்டியலில் இலக்கு வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க நிதி நிறுவனங்கள் ரஷ்யாவின் கரன்சியான ருபலில் வெளியாகும் கடன் பத்திரங்களை வரும் ஜூன் மாதத்திலிருந்து வாங்க, அதிபரின் செயல் ஆணை மூலம் தடை விதிக்க இருப்பதாகவும் பிபிசியின் கூட்டாளி சிபிஎஸ் நியூஸிடம் கூறப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவு முறை பதற்றமாக இருக்கும் இந்த நேரத்தில், இந்த தடைகள் விதிக்கப்பட உள்ளன.
அமெரிக்கா தன் தேச நலனைப் பாதுகாக்கும் விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என, கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தொலைபேசி உரையாடலின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
இரு நாடுகளும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பிருக்கும் விஷயங்களைக் குறித்து விவாதிக்க, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இல்லாமல் வேறு ஒரு நாட்டில், சந்தித்துப் பேச ஒரு திட்டத்தையும் ரஷ்ய அதிபர் புதினிடம் முன் மொழிந்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் பைடன்.
கடந்த மாதம் வெளியான ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு கொலைகாரர் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ஆம் என விடையளித்தார் ஜோ பைடன்.
No comments: