உப தபால் நிலையங்களை உபயோகிக்கும் மக்களின் கவனத்திற்கு



கொரோனா பரவல் காரணமாக உப தபால் நிலையங்களை திறந்து வைக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்படும் என அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் உப தபால் நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருந்தன.

அத்துடன், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உப தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.

No comments: