நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 515 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 419 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 83 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என குறிப்பிப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 44371 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,717 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7,443 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: