நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 584 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்.

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 576 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 49,533 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,621 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 6,672 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

No comments: