நாட்டில் நேற்றைய தினம் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு உயிரிழப்புகள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் கடந்த 10ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக இரத்தம் விஷமடைந்தமை, உணர்வுகள் செயலிழந்தமை மற்றும் கொரோனா நிமோனியா தாக்கம் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவர் ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தாக்கம் காரணமாக இரத்த ஓட்டம் தடைப்பட்டமை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக பக்கவாதம் மற்றும் கொரோனா நிமோனியா தாக்கம் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 244 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: