மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி ஒருவருக்கு தொற்று
பொகவநதலாவ நிருபர் எஸ்.சதீஸ்
பஸ்பாகே கோரளை சுகாதர வைத்திய அதிகாரி காரியலயத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கடந்த 10 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரிலுள்ள காப்புறுதி நிலையமொன்றில் கடமையாற்றிய ஊழியர்கள் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.தொற்றுக்குள்ளான ஐவரில் ஒருவர் மேற்படி வைத்தியரின் நாவலப்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்து சென்றதையடுத்து குறித்த வைத்தியர் தாமாக முன்வந்து மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இன்று (12)தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வைத்தியரின் குடும்பம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக இன்னொரு பொது சுகாதார பரிசோதகரை காரியாலய செயற்பாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பஸ்பாகே கோரளை சுகாதார வைத்திய காரியாலயத்தின் தலைமை வைத்திய அதிகாரி எம். யூசுப் தெரிவித்தார்
No comments: