நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 674 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 627 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்த 47 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 53750 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றில் இருந்து மேலும் 649 பேர் குணமடைந்து நேற்று வீடுதிரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,820 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7,660 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: