நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் சுமார் 50 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் 597 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 256 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாரஹென்பிட்டி பகுதியில் 79 பேரும், பொரளை பகுதியில் 60 பேரும், கிரேண்ட்பாஸ் பகுதியில் 26 பேரும், தெமட்டகொட பகுதியில் 19 பேரும், கொம்பனி தெரு பகுதியில் 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு கோட்டை, கொள்ளுபிட்டி, மட்டக்குளி, பத்தரமுல்லை, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலும் தொற்றுக்குள்ளானவர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவாட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18,366  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,  கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில்  இதுவரை 216 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 62 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கம்பஹா மாவட்டத்தில்  தொற்றுக்குள்ளானவர்களில் 48 பேர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் 36 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 34 பேரும், கண்டி மாவட்டத்தில் 33 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 20 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும், நுவரெலியா  மாவட்டத்தில் 6 பேரும், பதுளை மாவட்டத்தில் இரண்டு பேரும்  நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை 43,298 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 43,299 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து   இதுவரை 35,329  பேர்  குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 7,766  பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாடு முழுவதும் முப்படையினரால் நடாத்தப்படும்  77 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5243 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் 12 இலட்சத்து 5 ஆயிரத்து 417 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: