நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னல – உம்மான மற்றும் வேத்தேவ ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளன.
மேலும், பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கொட பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
No comments: