நேற்றைய தினம் 8 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில் வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 52 வயதுடைய ஆண் ஒருவர் கொவிட் -19 தொற்றுறுதியான நிலையில் வெலிகட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஜனவரி 6ம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜகிரி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவர் கொவிட்- 19 தொற்றுறுதியான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 7ம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா மற்றும் கடும் நீரழிவு நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 8ம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு - 12 பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 8ம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா மற்றும் வலிப்பு நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - 14 பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டார்.
அதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 10 திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் -19 நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என இனங்காணப்பட்டார்.
அதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 10ம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் - 19 நிமோனியா மற்றும் கடும் சிறுநீரக நோய் நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர்,தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 10ம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் - 19 நிமோனியா மற்றும் குருதி விஷமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அவர்,பின்னர் வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அங்கு நேற்றைய தினம் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் - 19 நிமோனியாவுடன் குருதி விஷமானவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: