நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் - 3 கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுள் 236 பேர் மினுவங்கொட, பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 48,380 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 41,325 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், நோய்த் தொற்றுக்கு உள்ளான 6,822 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேவேளை மேலும் மூன்று கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலை கைதியான 62 வயதான ஆணொருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 08ம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர், பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 10ம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம் புற்றுநோய் நிலை மற்றும் கொவிட் நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த 09ம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் இருதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
No comments: