நேற்றைய தினம் 2 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்
நாட்டில் நேற்றைய தினம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகின.
இதற்கமைய,இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆணொருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடந்த 02ம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த்தொற்றின் சிக்கலான நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இரத்தினபுரியைச் சேர்ந்த 86 வயதான ஆணொருவர் அவரது வீட்டில் கடந்த ஜனவரி முதலாம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா மற்றும் கால்-கை வலிப்பு நிலை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: