நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 197 பேர் தொற்றாளர்களாக அடையாளம்
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 674 பேரில் 197 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 165 பேர், நீர் கொழும்பு பகுதியில் 49 பேர், நிட்டமுவ பகுதியில் 21 பேர், வத்தளை பகுதியில் 17 பேர் மற்றும் கட்டுநாயக்க பகுதியில் 15 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குருணாகல் மாவட்டத்தில் 54 பேர் , காலி மாவட்டத்தில் 37 பேர் ,இரத்தின புரி மாவட்டத்தில் 33 பேர் , மாத்தறை மாவட் டத்தில் 24 பேர், கண்டி மாவட்டத்தில் 22 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 20 பேர், மொனராகலை மாவட்டத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
அம்பாறை மாவட்டத்தில் 09 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
மாத்தளை , பொலன்னறுவை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 04 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
பதுளை மாவட்டத்தில் 03 பேர் , மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா 02பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
அனுராதபுரம், யாழ்ப்பாணம், கேகாலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 47 பேர் அடங்கலாக நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
No comments: