நாட்டின் இன்றைய வானிலை
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழைபெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments: