நேற்றைய தினம் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 428 பேரில் 193 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதில் அட்டுலுகம கிராமத்தில் 162 பேர், கொழும்பு மாவட்டத்தில் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதில் பொரளைப் பகுதியில் 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 42 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 12 பேரும் அடங்குவர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 15 பேர் , காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குருணாகல் மாவட்டத்தில் 07 பேர், அம்பாறை மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 04 பேர், கம்பஹா மாவட்டத்தில் 03 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேர், கிளிநொச்சி, புத்தளம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
கண்டி, யாழ்ப்பாணம், மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரும் நேற் றைய தினம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
No comments: