முன்பள்ளிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கத் தீர்மானம்
முன்பள்ளிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முன்பள்ளிகள் மற்றும் பகல் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: