மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பிலான தீர்மானம்


மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21ம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 23ம் திகதி முதல் மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 23ம் திகதி முதல் 2021 ஜனவரி 03ம் திகதிவரை பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: