கொரோனா தொற்று - நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரம்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர், ராகம பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் , கடவத்த பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர், வவுனியா பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் ஆகியோரே நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
01. புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 26ம் திகதி உயிரிழந்துள்ளார்.
02. ராகம பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் ராகம வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட வருத்தத்தால் 2020 டிசம்பர் 26ம் திகதி உயிரிழந்துள்ளார்.
03. கடவத்த பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் ராகம வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 25ம் திகதி உயிரிழந்துள்ளார்.
04. வவுனியா பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையிலிருந்து அனுராதபுர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பால் 2020 டிசம்பர் 26ம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: