கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்

எஸ். அஷ்ரப்கான்


கல்முனை செய்லான் வீதியிலிருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு நேற்று (28)இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று, கல்முனை பொதுச் சந்தை, கல்முனை பஸார்,கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தகர்களுக்கு மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டதை தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும்,தொற்றாளர்களை இனங்காண்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: