நாட்டில் நேற்றைய தினம் 618 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 618 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் பேலியகொட - மினுவாங்கொடை கொத்தணியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாவர்.
இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,998 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 36,667 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8,944 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,552 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.
No comments: