2125 கிலோ கிராம் மஞ்சள் தொகை மீட்பு
நுரைச்சோலை - மாம்புரி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2125 கிலோகிராம் மஞ்சள் தொகை கைப்பற்றபப்ட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கடற்றொழில் படகு ஒன்றின் ஊடாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த மஞ்சள் தொகையின் பெறுமதி 160 இலட்சத்திற்கும் அதிகம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்ட வீட்டில் இருந்த இரண்டு பேர் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: