கிழக்கில் 04வது கொவிட் மரணம் கல்முனை சுகாதார பிராந்தியத்தில் பதிவு !
கிழக்கு மாகாணத்தின் 04வது கொவிட் தொற்று நோயாளி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் நபர் ஒருவரே. மரணமடைந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்..
இன்று 54 வயதுடைய அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பொது மகன் நெஞ்சுவலி காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஈ.சி.ஜி பரிசோதனையைத் தொடர்ந்து அவருக்கு மரடைப்பு வந்திருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டு அன்டிஜென்ட் பரிசோதனையும் செய்த பொழுது குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .
குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார்.
இந் நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவர் உயிரழந்துள்ளார்.
கல்முனை பிராந்தியத்தில் இதுவரை நான்காவது கொரோனா மரணமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந் நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவர் உயிரழந்துள்ளார்.
கல்முனை பிராந்தியத்தில் இதுவரை நான்காவது கொரோனா மரணமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments: