ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்


(சந்திரன் குமணன்)

அம்பாறை மாவட்டத்தில் ,அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து, வருகின்றதை, தொடர்ந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ,ஆழ்கடல் மீன்பிடியில் ,ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள ,தயாராகி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு ,முன்னர்,  ஆழ்கடலில், ஏற்கனவே போடப்பட்ட ஒரு சில மீனவர்களின் வலைகள் ,கடல் கொந்தளிப்பு, காரணமாக கடலோடு சென்ற நிலையில் இருக்கின்ற ,வலைகளை வைத்து தொழிலை திங்கட்கிழமை(25) மாலை ஆரம்பித்துள்ளனர்.

இதே வேளை சாய்ந்தமருது மாளிகைக்காட்டு,  பிரதேசத்தை சேர்ந்த சில மீனவர்கள் தமது ,வள்ளங்களுடன் மீன்பி,டிப்பதற்காக, நேற்று(24) கடலுக்குள் சென்ற போதிலும் ,மீன்பிடிபாடு குறைவாக உள்ளதாக குறிப்பிட்டனர்.

அத்துடன் ஆழ்கட்ல் ,மீனவர்கள் தமக்கான மீன்பிடித் துறைமுகமான ஒலிவில் அமைந்துள்ள ,துறையை விரைவாக ,நிர்மாணிக்க உதவுமாறு கேட்டனர்.இதே வேளை ,ஒரு சில மீனவர்கள், பழுதடைந்த தங்களது வலைகளை சீர் செய்யும் ,பணியில் ,ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தததை அவதானிக்க முடிந்தது.இதேநேரம் அண்மைக்காலமாக ,மீனவர்கள் கடலரிப்பு, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழிலை இழந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




No comments: