திருக்கோவில் பிரதேச செயலகத்தில் மாணவர் ஒழுக்கம் தொடர்பான கலந்துரையாடல்

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை சீரமைத்தலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தல் மற்றும் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தல்

மாலை நேரங்களில் மைதானங்களில் மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடும் கலாச்சாரத்தை ஏற்படுத்துதல்

வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் ஆலயங்களுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தல்

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் -9 மற்றும் அதற்குட்பட்ட தரங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வெள்ளிகிழமைகளில் மாலை 4.00க்கு பின்னரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும் வகுப்புக்களை நடத்துவதில்லை எனும் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

 25.07.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படுமென தனியார் கல்வி நிலைய ஒன்றியத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது

பாடசாலை மாணவர்களுக்கான சிகையலங்காரமானது பாடசாலை சட்டதிட்டங்களுக்கு அமைவானமுறையில் ஒழுக்கமானதாக சகல சிகை அலங்காரநிலையங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும்.

குறித்த கோரிக்கை சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை 25.07.2023 முதல் திருக்கோவில் கல்வி வலய பிரதேசத்தில் முழுமையாக அமுலாக்குவதென தீர்மானிக்கப்பட்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கலந்துரையாடலில் மத தலைவர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு V.பவாதரன் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.இரா. உதயகுமார் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி 

Dr. P.மோகனகாந்தன் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் ,பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் கல்விநிலைய உரிமையாளர்கள், சிகைஅலங்கார நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



No comments: