அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYEE Tax) விதிக்கப்படும் தொகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களிடம் வீட்டு வசதிக்காக சம்பளத்தில் 40,000 ரூபா அல்லது 12.5 சதவீதம் என அறவிடப்பட்ட தொகை, அடிப்படை சம்பளத்தில் 12.5 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர்களுக்கு பணமல்லா சலுகைகளாக வழங்கப்படும் வாகனம், எரிபொருள் கொடுப்பனவு வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்றுக்கு இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களிடம் இருந்து வீட்டுக்காக அறவிடப்படும் மொத்த சம்பளத்தில் 20,000 ரூபா அல்லது 12.5 வீதமாக கருதப்பட்ட தொகை, அடிப்படை சம்பளத்தில் 12 வீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வீட்டுப்பாவனை பொருட்களுக்காக அறவிடப்படும் 5000 ரூபா அல்லது மொத்த சம்பளத்தில் அறவிடும் 2.5 சதவீதம் சலுகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

என்ஜின் திறன் 18000 கன சென்றிமீற்றர் மற்றும் 1800 க்கு மேல், முறையே 50,000 ரூபா மற்றும் 75,000 ரூபா என வழங்கப்பட்ட சலுகை, சாரதிக்கு 10,000 வாகனங்களுக்கு 20,000 ரூபாவாகவும், எரிபொருளுக்கு ரூ.20,000 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் 100 வீதம் வரிக்கு உட்பட்ட எரிபொருள் கொடுப்பனவு 25 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments: