உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்படுகின்றதா ?



அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தன கருணாரத்னவினால் இன்று (29) விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 09ம் திகதி நடை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் செயற்பாட்டுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அறிவித்தல் இதுவரை அச்சகத் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தன கருணாரத்னவின் கையொப்பத்துடன் இக் கடிதம் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளில் மும்முரம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது




No comments: