இன்றைய காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்.

 வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, தீவின் பல பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் மந்தாரமாக இருக்கும் மற்றும் குளிர் காலநிலை நிலவும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில்   அதிகபட்சமாக 75 மி. மி ஆகவும் இருக்கலாம்.

மீதமுள்ள பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



No comments: