மட்டக்களப்பில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்டவரிசையில்

(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பபு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வாகனுங்களுடன் மற்றும் கலன்களுடன் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் இன்று செவ்வாய்க்கிழமை (6) அதிகாலை 5 மணி தொடக்கம் காத்திருக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்கள் இல்லை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் வாகனங்கள் உட்செல்லவிடாது கயிறுகட்டி மூடியுள்ளனர்.

இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் அதிகாலை 5 மணி தொடக்கம் நீண்ட வரிசையில் வாகனங்களுக்கு பெற்றோல். டீசல் பெறுவதற்கும் வீடுகளில் விளக்கு மற்றும் அடுப்பு எரிப்பதற்காக பொதுமக்கள் மண்ணெணையை பெறுவதங்காக கலன்களுடன் சுட்டெரிக்கும் வெய்யிலில் காத்துக்கிடக்கின்றனர்.

No comments: