இரத்தம் சேகரிக்கும் பைகளுக்கு தட்டுப்பாடு



மத்திய இரத்த வங்கியில் இரத்தத்தைசேகரிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வாரத்தில் இரத்தம் ஏற்றுவதற்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இரத்தம் சேமிக்கும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் அதனை நிர்வகித்து வருவதாக மத்திய இரத்த வங்கியின் பணிப்பாளர் மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

No comments: